குக் வித் கோமாளி 7-ல் இருந்து வெளியேறிய இரண்டு ஜோடிகள்.. ரசிகர்கள் அதிர்ச்சி

குக் வித் கோமாளி 7
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியின் 7-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் செஃப் தாமு, செஃப் கௌஷிக், நடிகை ரோஜா, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். மேலும், இம்முறை ரியல் ஜோடிகள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 7-ல் கடந்த நான்கு வாரங்களாக வெள்ளை அணி மற்றும் ஆரஞ்சு அணிக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதில் வெள்ளை அணியில் மூன்று ஜோடிகளும், ஆரஞ்சு அணியில் மூன்று ஜோடிகளும் உள்ளனர்.
இந்த வாரம் குக் வித் கோமாளியில் ‘டபுள் ட்ரபுள்’ என கூறப்பட்டு, இரண்டு ஜோடிகள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதுவும் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அணியிலிருந்துதான் இரண்டு ஜோடிகள் வெளியேறுவார்கள் என்றும் நடுவர்கள் தெரிவித்தனர்.
வெளியேறிய இரண்டு ஜோடிகள்
இந்த நிலையில், இந்த வாரம் நடைபெற்ற போட்டியில், வெள்ளை அணி சிறப்பாக சமையல் செய்து அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றியடைந்தது. இதனால் ஆரஞ்சு அணியில் உள்ள மூன்று ஜோடிகளில் இரண்டு ஜோடிகள் வெளியேற நேர்ந்தது.
மஞ்சுநாதன் – ராஜேஸ்வரி, சம்யுக்தா – அனிருதா, பாக்யா – கானா வினோத் ஆகிய மூன்று ஜோடிகள் டேஞ்சர் சோனில் இருந்தனர். இதில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்த மஞ்சுநாதன் – ராஜேஸ்வரி மற்றும் கானா வினோத் – பாக்யா ஆகிய இரண்டு ஜோடிகள் வெளியேறியுள்ளனர். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.






