Quarters காலி செய்து வந்த செந்திலுக்கு ஷாக் கொடுத்த பாண்டியன்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சோகமான காட்சிகள் தான் இடம்பெறுகின்றன.
பாண்டியனிடம் எப்படியோ சண்டை போட்டு முத்துவேலுக்கு என்ன ஆனது என்பதை தெரிந்துகொண்டார் சக்திவேல், உடனே தனது அண்ணனை காண குமார், அண்ணி மற்றும் பழனியுடன் மருத்துவமனை செல்கிறார்.
அங்கு தனது அண்ணனை முதலில் பார்க்காமல் கதிரிடம் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார். அதோடு கதிரை அங்கிருந்து கிளம்பு எங்கள் அண்ணனை நான் பார்த்துக்கொள்வேன் என விரட்டுகிறார்.
பின் பழனி, நான் இருக்கிறேன் நீ வீட்டிற்கு போ என கதிரை அனுப்பிவிடுகிறார்.
புரொமோ
இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ ஒன்று வெளியாகிறது. அதில் லஞ்சம் வாங்கி பிரச்சனையில் சிக்க இருந்து செந்தில் எப்படியோ தப்பித்துவிட்டார்.
இதனால் அவர் Quarters காலி செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கே வந்துவிடுகிறார். அவர் வீட்டிற்கு வாங்கிய பொருள்களை பார்த்த பாண்டியன் அதற்குள் இத்தனை பொருள்களை வாங்குவியா என கேட்கிறார்.
பின் Furniture எல்லாம் இருக்கட்டும், ஏசி மற்றும் டிவியை அட்டைப்பெட்டியிலேயே வைத்திருங்கள், கரெண்ட் பில் எவ்வளவு வரும் தெரியுமா என கூற செந்தில் ஷாக் ஆகிறார்.






