ரூ. 100 கோடி கொடுத்தாலும், அதை செய்யமாட்டேன்.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த அதிரடி முடிவு

ஐஸ்வர்யா லட்சுமி
மலையாள சினிமா மூலம் பிரபலமாகி பின் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, மாமன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி விலகினார்.
அதிரடி முடிவு
இதுகுறித்து பேசிய அவர், அந்த முடிவு தனக்கு மிகுந்த மன அமைதியை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துக்களை பதிவிட்டு என்னை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கியது. ஒரு கட்டத்தில் இந்த உலகமே எனக்கு எதிராக இருப்பது போலவும், அனைவரும் என்னை வெறுப்பது போலவும் நான் உணர்ந்தேன்”.
“யாராவது எனக்கு ரூ. 100 கோடி கொடுத்தாலும், சமூக வலைதளங்களின் பக்கம் நான் மீண்டும் வர மாட்டேன். இப்பொழுது ஆன்லைனில் பழகுவதை விட மக்களை நேரில் சந்தித்து பேசுவதையே அதிகம் விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.






