புகுந்த வீட்டில் அடக்குமுறையை எதிர்த்து கேள்வி கேட்கும் மதி.. அழகே அழகு சீரியல் புரோமோ

அழகே அழகு சீரியல்
அழகு மதி – சுரேஷுக்கு இருவருக்கும் விருப்பமே இல்லாமல் திருமணம் நடந்தது. இந்த திருமணமே சுரேஷுக்கு மீண்டும் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்து வைத்தேன் என தங்கராஜ் கூறினார்.
அதனால், அழகு மதி கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்றார். ஆனால், எந்த உருட்டல் மிரட்டல்களுக்கும் பணியாமல், என்னால் புகாரை திரும்ப பெற முடியாது என மதி கூறிவிட்டார்.
புரோமோ
கடந்த வாரம் இப்படி சென்ற நிலையில், வரும் வாரத்திற்கான புரோமோ வெளியாகியுள்ளது. இதில் காலையில் ஜாகிங் செல்லும் அழகு மதியை, ‘நாலு பேர் முன்னாடி இவ இப்படி ஓடினா என்ன நினைப்பாங்க’ என மாமனார் கேட்க, ‘ஒரு பொண்ணு ஜாகிங் போறதுல என்ன தப்பு’ என தனது கேள்வியை கேட்கிறார்.
இதன்பின், ‘ஒரு விஷயம் நீ செய்யக்கூடாது என வீட்டில் சொன்னால், அதை கேள்’ என சுரேஷ் கூறுகிறார். ‘அப்போ நான் வேலைக்கு செல்ல கூடாது என கூறினால், நான் போகக்கூடாதா?” என கேட்கிறார் மதி.
இதன்பின், வீட்டில் உள்ளவர்களுக்கு மொத்தம் 10 முட்டையை வேக வைத்துவிடு என மலர் கூற, அப்போ உங்களுக்கு சாப்பிட முட்டை வேண்டாமா என மதி கேட்கிறார். ‘அழகு மலர் வீட்டில் சும்மா தானா இருக்கிறாள்’ என மாமியார் கூற, ‘இந்த வீட்டில் உள்ள அனைவரை விடவும் மலர்தான் அதிக வேலை பார்க்கிறார், இவங்க ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா என வீட்டில் நடக்கும் அடக்குமுறையை எதிர்த்து ஒவ்வொன்றாக கேள்வி எழுப்புகிறார்.






