தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் சரவணனை கோவிலில் அஞ்சலியுடன் பார்த்த மாணிக்கம் வீட்டில் சொல்லி பாக்கியத்துடன் பாண்டியன் வீட்டிற்கு வந்து பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிட்டார்.
அந்த சமயம் பாண்டியன் வீட்டிற்கு வந்த மயில் எப்படியோ பேசி தனது அம்மா-அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். பின் அவர்களிடம் மீண்டும் மீண்டும் ஏன் என்னை அவமானப்படுத்துகிறீர்கள், என் குழந்தையை நான் பார்த்துக் கொள்வேன் என்கிறார்.
நீ இப்படியே இருந்தால் உன் தங்கை வாழ்க்கை என்ன ஆவது என சண்டை போட உடனே மயில் வீட்டைவிட்டு செல்கிறேன் என்கிறார். பிறகு அவரது அப்பா சமாதானப்படுத்தி மயிலை வீட்டில் இருக்க வைக்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோடில், வழக்கம் போல் ராஜி-கதிர் கியூட்டான காட்சிகள் இடம்பெறுகின்றன. பின் கடையில் சரவணன்-பாண்டியன் காட்சிகள் வர அடுத்து கோவிலில் சரவணன்-அஞ்சலி காட்சி வருகிறது.
அங்கு அஞ்சலியுடன் சரவணன் பேசிக்கொண்டிருப்பதை கண்ட பாண்டியன் செம ஷாக் ஆகிறார். பின் தனது மகனுடன் வீட்டிற்கு செல்லும் போது அஞ்சலி குறித்து பேசுகிறார் பாண்டியன்.
இன்று சாதாரண காட்சிகளுடன் எபிசோட் முடிவடைய நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகிறது. அதில் லஞ்சம் வாங்கி சம்பாதித்த பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் போது திடீரென மீனா அந்த அறைக்குள் வந்துவிடுகிறார்.
அவர் திடீரென வந்ததும் பதறிய செந்தில் கையில் இருந்த பணத்தை கீழே போட அதைப்பார்த்து மீனா செம ஷாக் ஆகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.






