ஜனனியை முடித்துவிட பிளான் போட்ட குணசேகரன், ஆனால்?… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்களுக்கான முன்னேற்றத்தை, எழுச்சியை பற்றிய கதையாக இந்த தொடர் இருக்கும் என ஆரம்பிக்கப்பட்டது தான் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
ஆனால் தொடர் ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் தான் சூழ்ச்சியால் பந்தாடப்பட்டு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆணாதிக்க எண்ணம் கொண்ட, பெண்களை அடிமைப்படுத்த நினைப்பவர்கள் இன்னமும் அப்படியே தான் இருக்கிறார்கள். 2 சீசன்கள் வந்துவிட்டது, ஒரு மாற்றமும் இல்லை, இதில் புதிய வில்லன் வேறு என்ட்ரி கொடுத்துள்ளார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி ஜனனியை வீட்டிற்கு வரச் சொல்கிறார். சக்தி நாம் பேசியது வீடியோ, போட்டோ என அவர்களிடம் கிடைத்துள்ளது, இன்னும் வேறு என்னென்ன கிடைத்தது என தெரியவில்லை என கூறுகிறார்.
இதற்கு இடையில் குணசேகரன் தம்பிகளிடம் இதுதான் சரியான நேரம், ஜனனியை மொத்தமாக முடித்துவிட வேண்டும். அவளை வீட்டில் வைத்து தான் பந்தாட வேண்டும் என்கிறார்.
ஆனால் ஜனனி இப்போது அந்த வீட்டிற்கு வந்தால் சரியாக இருக்காது என சக்தியிடம் நாம் வரவில்லை என ஈஸ்வரியிடம் கூறச் சொல்கிறார். இதோ புரொமோ,






