உயிரை கொடுத்து அதனை செய்தாலும், ஏமாற்றம் மட்டும்தான்.. பாடகி ஸ்வேதா மோகன் வருத்தம்

ஸ்வேதா மோகன்
திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்வேதா மோகன். இவர் பிரபல பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகள் ஆவார்.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு வெளிவந்த இந்திரா படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நீ பார்த்தா விழிகள், என்ன சொல்ல, இன்னும் கொஞ்ச நேரம், வா வாத்தி என பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 700க்கும் மேற்பட்ட பாடல்களை ஸ்வேதா மோகன் இதுவரை பாடியுள்ளார்.
ஸ்வேதா வருத்தம்
இந்த நிலையில், வெற்றிகரமாக பின்னணி பாடகியாக வலம் வரும் ஸ்வேதா மோகன், “ஒரு பாடகராக ஒரு பாடலை பதிவு செய்வது என்பது வேறு வேலை அல்ல; அது எமோஷனலான தருணம்; ஒரு பாடலை பாடிய பிறகு அது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் மனதிற்குள் இருக்கும். ஆனால், அது வெளியாகும்போது வேறொருத்தர் குரலில் கேட்கும்போது ஏற்படும் ஏமாற்றத்தை விளக்க முடியாது; இது எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் நடந்திருக்கிறது” என கூறியுள்ளார்.






