அழகான காட்சியுடன் முடிவுக்கு வந்தது கனா கண்டேனடி சீரியல்… கடைசி காட்சி போட்டோ இதோ

கனா கண்டேனடி
விஜய் தொலைக்காட்சியில் இந்த வருடம் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல்களில் ஒன்று தான் கனா கண்டேனடி.
இதில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜாய்சன் நாயகனாக நடித்தார்.
3 பெண் தோழிகளின் வாழ்க்கை கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பானது, சீரியலில் இளம் கலைஞர்கள் பலரும் நடிக்க ரசிகர்களும் ஆர்வமாக தொடரை பார்த்து வந்தார்கள்.
ஒன்றாக இருக்கும் 3 பெண் தோழிகள், திருமணத்திற்கு பின்பும் இணைந்தே இருக்கிறார்களா? சூழல் காரணமாக நட்பினைக் காப்பாற்ற அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த தொடர் எடுக்கப்பட்டது.
கிளைமேக்ஸ்
நன்றாக ஓடிக் கொண்டிருந்த இந்த தொடரை திடீரென ஏன் என்று தெரியவில்லை விஜய் டிவி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.
கனா கண்டேனடி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்று ஏற்கெனவே தகவல் வந்துவிட்டது. இந்த நிலையில் ஜுன் 26, அழகான ஜோடி இணைவதுடன் சீரியல் முடிவுக்கு வருகிறது.
இதோ சீரியலின் கடைசிக் காட்சி போட்டோ,






