மனைவியை பிரிந்துவிட்டாரா நாஞ்சில் விஜயன், திருநங்கை சாபமா?… அவரே போட்ட பரபரப்பு பதிவு
நாஞ்சில் விஜயன்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் தான் நாஞ்சில் விஜயன்.
இவர் கடந்த சில மாதங்களாக சொந்த தொழிலை மனைவியுடன் சேர்ந்து கவனித்து வந்தார். திருமணம், குழந்தை, வீடு, கார் என தங்களது உழைப்பின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்கள்.
ஆனால் இப்போது என்ன ஆனது என தெரியவில்லை, நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஒரு பரபரப்பான செய்தி வலம் வருகிறது.
பிரபலம் பதிவு
நாஞ்சில் விஜயன், திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன் என பதிவு வைரலாகிறது.
அதில், என் திருநங்கை சகோதரரிடம் நான் தோற்றுவிட்டேன் என்றும், சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தங்களுடன் இருந்த நல்ல நட்பை கொச்சைப்படுத்தி தன்னை பற்றி பல அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வந்தீங்க.
இந்த பிரச்சனையின் போது என்னுடைய மனைவி என் மீது நம்பிக்கையாக இருந்தார். ஆனால் வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய சண்டையின் போது மனைவியின் தாயார் நீ ஒரு திருநங்கையை ஏமாற்றிவிட்டு தானே என் பெண்ணை திருமணம் செய்துகொண்டாய் என சொல்லிவிட்டார்.
என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்துவிட்டேன். இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்புகிறேன் என நீண்ட பதிவு போட்டுள்ளார்.
