தர்ஷினி குறித்து ஜனனிக்கு கிடைத்த விஷயம், கடத்தியது இவர்தானா… எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
தவறு செய்தவர்களுக்கு பிரச்சனை தருவதை தாண்டி நியாயமாக போராடுபவர்களுக்கு தான் அதிக பிரச்சனை அமைகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், எப்போது பாரு ஜனனியே எல்லாவற்றிலும் சிக்குகிறார்.
பெண்கள் எந்த பிரச்சனை வந்தாலும் போராடி முன்னேற வேண்டும் என்ற கருத்தை கூறுவது நியாயம் தான். ஆனால் தொடர் ஆரம்பித்த நாள் முதல் பெண்கள் பிரச்சனையிலேயே இருப்பது போல் காட்டுவது மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பை தான் கொடுக்கிறது.
அத்தனை தவறுகளையும் செய்த குணசேகரன் மற்றும் கதிர் இப்போதும் எந்த தண்டனையும் அனுபவிக்காமல் ஜம்முனு வீட்டில் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.
புரொமோ
இப்போது தர்ஷினி கடத்தப்பட்ட கதைக்களம் தான் செல்கிறது. ஜனனி தான் தர்ஷினியை கடத்தி வைத்துள்ளார், குணசேகரன் வழக்கிற்காக தான் இவர் இப்படியெல்லாம் செய்கிறார் என ஈஸ்வரியை நம்ப வைத்துவிட்டனர்.
ஈஸ்வரியும், ஜனனியால் தான் தனது மகள் பாதிக்கப்பட்டுள்ளார் என நம்புகிறார்.
ஜனனியை போலீஸ் காவலில் எடுக்க குணசேகரன் குழுவும் பிளான் போட்டு வருகிறார்கள். இதற்கு இடையில் ஜனனிக்கு ஒரு போன் வருகிறது, அதாவது தர்ஷினி பற்றி தெரிய வேண்டும் என்றால் நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்கிறார்.
அவர் யார், வேறுயாரும் இல்லை ராணா தான், இவர்தான் தர்ஷினியை கடத்துகிறார் என்பது நன்றாக தெரிகிறது.
இதோ புரொமோ,






