கோலாகலமாக நடந்த சேரன்-சந்தா திருமணம், அடுத்து வந்த குட் நியூஸ்… அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை
சேரனை நினைவு தெரிந்தது முதல் காதலித்து வந்த கார்த்திகாவால் அவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்க்கவே முடியவில்லை.
நிச்சயதார்த்தத்திலேயே மிகவும் வருந்திய கார்த்திகா திருமண வரவேற்பில் சேரன்-சந்தாவை ஒன்றாக பார்த்து மிகவும் வருந்தினார், சந்தா இடத்தில் தன்னை வைத்தெல்லாம் பார்த்தார்.
அந்நிகழ்ச்சி முடிந்ததும் தனியாக நின்ற சேரனிடம் கார்த்திகா தனது மனதில் இருக்கும் வருத்தத்தை, கேள்வியை வெளிப்படுத்தி திடீரென அவரை கட்டிப்பிடித்துக்கொண்டார். இதனால் பிரச்சனை வெடித்து சேரன்-சந்தா திருமணம் நடக்குமா என்றாகிவிட்டது.
ஆனால் இன்றைய எபிசோடில், எல்லோரும் பேச சேரனின் காதலை முழுவதுமாக புரிந்துகொண்ட சந்தா அவரை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.
குட் நியூஸ்
நாளைய எபிசோடில், சேரன்-சந்தாவிற்கு கோலாகலமாக திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியல் குறித்து ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.
அது என்னவென்றால், தமிழில் உருவாக்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் இதுவரை கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில் 7வதாக பெங்காலியில் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். தொடருக்கு Ashirbad எனவும் பெயரிடப்பட்டுள்ளதாம்.
