நடிகர் ரவி மோகன் வீட்டில் திருடிய பணியாளர்.. வசமாக சிக்கினார்

நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு சமீபத்தில் சினிமா துறையில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. அவர் கண்ணீருடன் கொடுத்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது ஒருபுறம் இருக்க ரவி மோகன் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோயிருப்பதாக சமீபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது. அது பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
டிரைவர் கைது
3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வைர செயினை திருடியது யார் என வீட்டில் இருக்கும் பணியாளர்கள் எல்லோரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது டிரைவர் ரமேஷ் தான் திருடினார் என்பது தெரியவந்திருக்கிறது.
அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டு இருக்கிறது.






