அய்யனார் துணை சீரியலில் சேரன்-கார்த்திகாவிற்கு தான் திருமணமா?… படப்பிடிப்பு தள வைரல் போட்டோ
அய்யனார் துணை
பொதுவாக சன் டிவி சீரியல்களில் தான் ஒரு திருமணம் என்றால் அதை வைத்து 1 வாரம் கதை ஓட்டுவார்கள். ஆனால் விஜய் டிவியில் எல்லா சீரியல்களும் ஒரே விஷயத்தை போட்டு இழுக்காமல் சட்டென்று முடிப்பார்கள்.
ஆனால் அய்யனார் துணை சீரியலில் சேரனின் திருமண விஷயம் மட்டும் இழுத்துக்கொண்டே போகிறது. சில முறை திருமணம் நின்றுபோக இப்போது சந்தாவுடன் கோலாகலமாக சேரனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
திருமணத்தின் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடக்க மணப்பெண் மட்டும் இன்னும் வரவில்லை. சந்தா பீகாரில் மாட்டிக்கொள்ள அவரை சென்னை அழைத்து வருவதில் சோழன்-பாண்டி ஏதேதோ செய்து வருகிறார்கள்.
கடைசியில் இந்த பிரச்சனைக்கு நிலாவின் அப்பா ஒரு வழி சொல்கிறார், நாளைய எபிசோடின் புரொமோவில், சந்தா சென்னை வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டோ
அய்யனார் துணை சீரியல் ரசிகர்கள் அனைவரும் சேரன்-சந்தா திருமணத்தை காண ஆவலாக உள்ள நிலையில் பரபரப்பை கிளப்பும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதாவது ரிசப்ஷன் மேடையில் சேரன் மற்றும் கார்த்திகா ஜோடியாக கையில் மாலையுடன் நிற்கிறார்கள். படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அப்போது சேரன்-சந்தாவிற்கு தான் திருமணமா என புலம்பி வருகிறார்கள்.
கடைசியில் சேரனுக்கு யாருடன் தான் திருமணம் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
