திருமண கொண்டாட்டத்திற்கு இடையில் செம ஷாக்கில் குடும்பத்தினர், அப்படி யார் வந்தது?… சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
அண்ணாமலை குடும்பத்தில் இப்போது கொண்டாட்டத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் அம்மா எல்லா விஷயங்களையும் மறந்து விடவே இப்போது தனது பேரன்களுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார்.
எனவே முத்து-மீனா, ரவி-ஸ்ருதி இருவருக்கும் மீண்டும் திருமணம் நடக்க இருக்கிறது.
இன்றைய எபிசோடில், வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் தான் நடக்கிறது. மீனாவிற்காக முத்து புதிய செயின், வளையல் எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார், அதில் மீனாவும் சந்தோஷப்படுகிறார்.
வீட்டில் எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்க மெஹந்தி விசேஷம் நடக்கிறது. எல்லா பெண்களும் கையில் மெஹந்தி வைத்துக்கொண்டிருக்க யார் கையில் அதிகம் கலர் பிடிக்கிறது என்பதை காண ஆவலாக உள்ளனர்.
அடுத்து குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பாடல் பாடி சந்தோஷமாக இருக்கிறார்கள்.
புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு சத்யா மற்றும் ரேகா வருகிறார்கள். அப்போது திடீரென சிந்தாமணி என்ட்ரி கொடுக்க குடும்பமே ஷாக் ஆகிறார்கள்.
விஜயா அவள் ஏன் இங்கே வந்தார் என கேட்க, நாம் இப்போது உறவினர்கள் அதான் வந்தேன் என்கிறார்.


