கோவில் நகை திருட்டில் சிக்கிய சிவனாண்டி.. கார்த்திக் காட்டிய அதிரடி ஆதாரம்! இன்று கார்த்திகை தீபம் எபிசோடில் பரபரப்பு!

கார்த்திகை தீபம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனம் கவர்ந்த கார்த்திகை தீபம் சீரியல், நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது.
நேற்றைய எபிசோடில் ரேவதி, கார்த்திக்காக அன்புடன் விதவிதமான உணவுகளை சமைத்து அசத்திய நிலையில், இன்றைய எபிசோட் காதல், துரோகம், அதிரடி என பல திருப்பங்களுடன் நகர்கிறது.
ரேவதி சமைத்த உணவுகளை கார்த்திக் ருசித்து மகிழ, இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழும் அழகான தருணங்கள் அரங்கேறுகின்றன.
இந்த நெருக்கம் இருவருக்குமிடையேயான காதலை மேலும் வலுப்படுத்துகிறது. ரசிகர்களுக்கு ரொமான்ஸ் விருந்தாக அமைந்த இந்த காட்சிகள் பெரும் வரவேற்பை பெறுகின்றன.
ஆனால் மறுபக்கம், கோவிலில் பெரிய சதித் திட்டம் அரங்கேறுகிறது.
சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் கோவில் நகைகளை கொள்ளையடித்து, அதை மாறுவேடத்தில் வந்த மயில்வாகனத்திடம் ஒப்படைத்து பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
எல்லாம் திட்டமிட்டபடி முடிந்துவிட்டதாக அவர்கள் நினைக்கும் நேரத்தில், எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.
மறுநாள் கோவிலில் நகைகள் காணாமல் போனது தெரிய வர, ஊரே பரபரப்பாகிறது. இந்த விவகாரத்தில் கார்த்திக் களமிறங்கி, அனைவரின் முன்னிலையிலும் ஒரு முக்கியமான வீடியோ ஆதாரத்தை வெளியிடுகிறார்.
அந்த வீடியோவில் சிவனாண்டி மற்றும் முத்துவேல் இணைந்து கோவில் நகைகளை திருடும் காட்சி தெளிவாக பதிவாகியிருப்பதை பார்த்து ஊர்மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும், கோபமடைந்த ஊர்மக்கள் இருவருக்கும் 50 சவுக்கடி தண்டனை வழங்க முடிவு செய்கிறார்கள். தங்களின் செயல் அம்பலமானதை உணர்ந்த சிவனாண்டி மற்றும் முத்துவேல் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, மாறுவேடத்தில் இருக்கும் மயில்வாகனம் இந்த பரபரப்பான சம்பவம் முழுவதையும் வீடியோவாக பதிவு செய்கிறான்.
சிவனாண்டி மற்றும் முத்துவேலின் அடுத்த முடிவு என்ன? கார்த்திக்கின் இந்த அதிரடி நடவடிக்கை இன்னும் என்னென்ன திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது?
பரபரப்பும், அதிரடியும் நிறைந்த இந்த காட்சிகளை காண, இன்று இரவு 9 மணிக்கு உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலை தவறாமல் பாருங்கள்!






