சீதாவிற்கு முத்து மற்றும் அவரது அம்மா செய்த காரியம், திணறிய அருண்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது மனோஜ் பிரச்சனையும், சீதா பிரச்சனையும் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
ரோஹினி வீட்டிற்கு சென்ற மனோஜ் இப்போதைக்கு இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என கூறுகிறார், அவருக்கு எத்தனை நாள் என கேட்க மனோஜ் ஏதோ சமாளிக்கிறார்.
பின் கனகா வீட்டிற்கு சென்று இப்போது வாழ்க்கை தொடங்க முடியாது, எனக்கு விவாகரத்து இன்னும் கிடைக்கவில்லை, கிடைத்த பிறகு பார்ப்போம் என்கிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், முத்து அருண் வீட்டிற்கு செல்கிறார்.
அங்கு முத்து அருணிடம், சீதாவை அடித்ததற்காக கோபமாக கேள்வி கேட்க அவர், சீதா என் மனைவி, இது எங்களது பிரச்சனை நீ யார் கேட்க, நான் போலீஸ் என கோபமாக முத்துவை அடிக்க செல்ல அவர் எட்டி உதைத்துவிடுகிறார்.
கீழே விழுந்த அருண் அடிக்க செல்ல முத்து அவரது கையை முறுக்கி மோசமாக தாக்குகிறார். சீதாவை நீ அடித்ததற்கு வீட்டிற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும், அதுவரை அவள் இங்கே வர மாட்டாள் என்கிறார்.
ஆனால் அருண், சீதா என் மனைவி அவள் கண்டிப்பாக இங்கே வருவாள், மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார்.
ஆனால் முத்து தனது முடிவை கூறிவிட்டு செல்கிறார்.
அருண், சீதாவிற்கு போன் செய்ய அவர் எடுக்க மறுக்கிறார், அந்த நேரம் சீதாவின் அம்மா போனை வாங்கி அருணை தனது மகளை அடித்ததற்காக கோபமாக திட்டுகிறார்.
முத்து அடிக்க, சீதா அம்மா திட்ட அருண் கொஞ்சம் திணறுகிறார்.
அடுத்து அண்ணாமலை வீட்டில் மனோஜ்-ரோஹினி பிரச்சனை பேசப்படுகிறது, ஆனால் ஒரு தெளிவான விஷயமும் பேசப்படவில்லை.






