நீட் தேர்விற்காக மாணவர்களின் போராட்டம், ஜனநாயகன் படத்தை இப்போது பார்க்கப்போவதில்லை.. பிரபல சீரியல் நடிகை

டெல்லி
நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவு இதுவரை எடுக்காததால் மாணவர்கள் போரட்டத்தில் இறங்கியுள்ளனர். அமைதியாக போராடிய மாணவர்களை போலீஸ் நடத்திய விதத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு வந்துள்ளது.
இத்தனை நாட்கள் போராட்டம் நடந்தும் இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை.
அந்த மாணவர்களின் போராட்டமாக முறைகேடு நடந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் Educational Minister தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு நீட் தேர்வே வேண்டாம் என்பது தான், அரசு சார்பிலும் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜனநாயகன்
இந்தியா முழுவதும் நீட் தேர்விற்கான மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது, அதைப்பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தமிழகத்தில் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் ரிலீஸ் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகை பரீனா, மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயகன் படத்தை இப்போதைக்கு பார்க்க வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன். இது என்னுடைய முடிவு, யாருக்கும் எதிரான முடிவு கிடையாது என பதிவு செய்துள்ளார்.






