ஈஸ்வரி சரமாரி கேள்வி கேட்ட ஜனனி, அவரின் பதில் என்ன… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
குணசேகரன், தனது குடும்ப தனது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என செய்யாத அநியாயம் இல்லை.
அவரின் அடக்கு முறையை எதிர்த்து போராடி குணசேகரன் வீட்டில் ஏற்கெனவே சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களின் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என போராடுபவர் ஜனனி.
இயக்குனர் சீரியலை எடுக்கும் போதே இக்கதை பெண்கள் எழுச்சிக்கான தொடர் என கூற பெண்கள் மிகவும் ஆர்வமாக பார்க்க துவங்கினார்கள், ஆனால் போகப் போக கதை பெண்கள் கொண்டாடுவது போல் அமையவில்லை. அதற்கு மாறாக வில்லன்கள் ராஜ்ஜியம் செய்யும் கதையாக தொடர் மாறிவிட்டது.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்த்த ஜனனி வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிவு எடுக்க அதற்கும் பிரச்சனை செய்தார்கள். வீட்டில் இருந்தவர் தர்ஷினியிடம் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லும்படி கேட்கிறார்.
அந்த நேரம் வந்த ஈஸ்வரி என் மகளிடம் என்ன கேட்கிறீர்கள் என கேட்க அதற்கு அவர், என்னையும் பேச விடவில்லை, நீங்களும் மனம்விட்டு பேச மறுக்கிறீர்கள். இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப்போகிறீர்கள்.
உங்கள் சுயமரியாதை, கௌரவம் எல்லாவற்றையும் உங்கள் கணவர் காலடியில் போட்டுவிட்டு எப்படி என் முன்னாடி நிற்கிறீர்கள் கேட்க ஈஸ்வரி, குணசேகரன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார் மன்னித்து விட்டேன் என்கிறார்.
இதோ அந்த புரொமோ,






