பப்பரப்பா என பெயர் மாற்றியதும் மனோஜிற்கு வந்த கோடீஸ்வர வாய்ப்பு… ஓகே சொல்வாரா, சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
நேற்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடில், மனோஜ் Numerologist போல ஒருவர் சொன்ன வார்த்தையை தனது பெயருக்கு முன் போட ஒப்புக்கொள்கிறார்.
இந்த விஷயத்தை விஜயாவிடம் வந்து கூற முதலில் தயங்கியவர் அப்படி மாற்றினால் எனக்கு கோடீஸ்வர யோகம் வரும் என மனோஜ் கூற சமாதானம் ஆகிறார். பின் வீட்டில் இருப்பவர்களிடம் மனோஜ்-விஜயா இந்த பப்பரப்பா விஷயத்தை கூறுகிறார்கள்.
பெயரை கேட்டதும் இவர்கள் இருவரை தவிர அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். சத்யா-ரேகா இருவரும் பாட்டி ஊரில் ஜாலியாக சுற்றி புகைப்படம் எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள்.
எபிசோட்
க்ரிஷ் பள்ளியில் சரியாக இருப்பதில்லை, பொய் கூறுகிறான் என்ற புகார் எல்லாம் வருகிறது என விஷயத்தை ரோஹினியிடம் கூறுகிறார் அவரது அம்மா.
ரோஹினி உடனே ஏன் பொய் கூறுகிறாய், யாரிடம் இருந்து கற்றுக்கொள்கிறாய் என கேட்க உங்களிடம் இருந்து தான் என க்ரிஷ் கூற உடனே அவர் ஷாக் ஆகி நிற்கிறார். பின் ரோஹினியிடம் அவரது அம்மா, உன் வாழ்க்கை என எல்லாம் நீ செய்ய அது க்ரிஷை பாதிக்கிறது.
க்ரிஷிற்காக ஒரு வாழ்க்கை உள்ளது, அவனுக்காக நீ வாழு என்கிறார். உடனே ரோஹினி தனது வாழ்க்கையை எண்ணி கதறி கதறி அழுகிறார்.
அடுத்து வீட்டில், சத்யா-ரேகா திருமணம் பற்றி முத்து கூற அண்ணாமலை என்ன இருந்தாலும் பெண் பெற்றவர்கள், அவர்களிடம் இந்த விஷயத்தை கூறியே ஆக வேண்டும் என்கிறார்.
இதனால் முத்து-மீனா, ரேகா வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை கூற அவர்கள் வழக்கம் போல் பிரச்சனை செய்கிறார்கள்.
கடைசியாக நாளைய எபிசோடின் புரொமோவில், மனோஜ் கடைக்கு மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் அம்மா வருகிறார். அவர் மனோஜிடம், என் மகள் அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டாள், ஆனால் அவள் அதிகம் உங்கள் பெயரையே கூறுகிறாள்.
நீங்கள் மட்டும் என் மகளை திருமணம் செய்தால் எங்களது சொத்தை எல்லாம் உங்கள் பெயருக்கு மாற்றுகிறேன் என்கிறார்.






