டைட்டில் ஜெயித்த அபிஷேகா! இரண்டாம் இடம் யார் பாருங்க

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப Li’l சாம்ப்ஸ் நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது நடந்து வந்த 5ம் சீசன் நிகழ்ச்சியின் பைனல் மிகவும் பிரம்மாண்டமாக இன்று நடைபெற்றது.
அதில் பைனலிஸ்ட் எல்லோரும் தங்களது திறமையை மேடையில் வெளிப்படுத்தினர். அது ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தது. டைட்டில் ஜெயிக்கபோவது யார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் எல்லோரது மனதிலும் இருந்தது.
வின்னர் லிஸ்ட்
இறுதியில் அபிஷேகா தான் டைட்டிலை ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பரிசாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது.
விஷ்ணுவர்தன் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
தன்வி இரண்டாம் ரன்னர் அப் ஆனார்.






