ஆதரவு வாபஸ் பெற்ற கட்சி.. மீண்டும் ட்விஸ்ட், விஜய் பதவி ஏற்பதில் சிக்கல்

நடிகர் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்குமா இல்லையா என்பது தான் கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
பெரும்பான்மை பெற விஜய் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அவர்களும் ஆதரவை அறிவித்துவிட்டு நிலையில் இன்று மாலை விஜய் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரினார்.
மறுத்த கவர்னர்
ஆனால் கவர்னர் அதற்கு மறுத்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. விஜய் இதுவரை 116 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை மட்டுமே கொடுத்திருக்கிறார்.
ஐயுஎம்எல் கட்சி விஜய்க்கு ஆதரவு என முதலில் செய்தி வெளியானது. ஆனால் அந்த கட்சி இப்போது ஆதரவு இல்லை என கூறி இருக்கிறது. விசிக-வும் இன்னும் ஆதரவை உறுதியாக அறிவிக்கவில்லை.
அதனால் விஜய் நாளை பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.






