கொடூரமான பாலியல் தொல்லை கொடுத்த பிரபல இசையமைப்பாளர்… பாடகி பரபரப்பு தகவல்

பெண்கள் எதிராக சமூகத்தில் நிறைய பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
எங்கோ 1, 2 என இருந்த பிரச்சனை இப்போது அதிகம் நடக்கிறது, பொறுப்பில் இருப்பவர்கள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைக்கும் நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள், ஆனால் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது.
சினிமா துறையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடகி சின்மயி பிரச்சனைக்கு பிறகு MeToo பிரச்சனை வெடித்தது. ஆனால் பெரியதாக பேசப்பட்ட வேகத்தில் அப்படியே எல்லோரும் பேசுவதை விட்டுவிட்டார்கள், இந்த பிரச்சனை முழுவதுமாக தீர நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் கேள்விக்குறி தான்.
இப்போது ஒரு பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.
பிரபல பாடகி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயா கிருஷ்ணனின் அக்கா தான் ஸ்வாகதா கிருஷ்ணன். பிரபல பாடகியான இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல இசையமைப்பாளர் தனக்கு கொடுத்த பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார்.
அதில் அவர், ஒரு கொடூரமான பாலியல் தொல்லை கொடுப்பவர்களால் பாதிக்கப்பட்டவள் நான். அந்த மோசமான அனுபவம் என்னை அந்த இடத்தில் இருந்து ஓடவைத்தது, ரிஷிகேஷில் அமைதியாக வாழ்கிறேன் என்றாலும் அந்த விஷயத்தை மறக்க முடியவில்லை.
ஒரு இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் வேலை செய்தேன், அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அந்த இசையமைப்பாளர் ஒரு பெண்ணை மட்டும் அல்ல பல பெண்களை நாசமாக்கி இருக்கிறார்.
ஆனால் அந்த இசையமைப்பாளரின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் அவரின் பெயரை சொல்ல வேண்டிய நேரம் வரும்போது நான் சொல்லுவேன் என கூறியுள்ளார்.






