பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் அடுத்து என்ன? படப்பிடிப்பு தள போட்டோ

சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது சின்ன மருமகள்.
படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எதிர்ப்பாராத விதமாக திருமணம் நடக்க அதனால் அவள் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்.
எப்போதும் பார்த்தாலும் தனது கணவனால் சந்தேகப்பட்டு வெளியே அனுப்பப்படும் தமிழ் இந்த முறை எனக்கு இனி இந்த உறவே வேண்டாம் தலை முழிகி விட்டு சென்றுவிட்டார்.
தற்போது தனது படிப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
போட்டோ
ஜெயிலில் இருந்து வெளியே வந்த ராஜாங்கம் அரசியலில் ஒரு பெரிய முடிவு எடுத்தார். அதாவத தனது மகன் சேதுவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்.
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்விக்கு எதிர்க்கட்சியிடம் இருந்து ஒரு வாய்ப்பு வந்தது. அதாவது சேதுவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தால் ரூ. 10 லட்சம் தருகிறோம் என்றனர், ஆனால் நடக்கவில்லை.
இந்த நிலையில் தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பெண்கள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்க இப்போது தமிழ் தேர்தலில் நிற்கிறார். அடுத்தக்கட்டமாக தமிழ் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ வெளியாகியுள்ளது.






