மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்… ரகளையான CWC செட்

குக் வித் கோமாளி
சமையல் ப்ளஸ் காமெடி என சிம்பிளான கான்செப்ட் என்றாலும் முதன்முறையாக அமைந்த வித்தியாசமான கான்செப்ட்.
இந்நிகழ்ச்சிக்கு முன் சமையல் என்றால் நன்றாக சமைக்க தெரிந்தவர் விதவிதமான இடங்களுக்கு சென்று சமைப்பது அல்லது செட்டில் சமைத்து காட்டுவது என்று தான் இருந்தது. மக்களும் ஒரே மாதிரியான சமையல் நிகழ்ச்சியை பார்த்து வந்து இதுபோல் புதிய கான்செப்டில் பார்த்ததும் கொண்டாடினார்கள்.
அதற்கு ஏற்ப நிகழ்ச்சியிலும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருந்தன.
இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பரபரப்பு சம்பவம்
சமீபத்தில் குக் வித் கோமாளி 7வது சீசன் படப்பிடிப்பில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் 3 பேரும் சேர்ந்து வாட்டர் மெலன் திவாகரை மோசமாக நடத்தியுள்ளார்களாம்.
அதேபோல் மாகாபா ஆனந்த் குடித்துவிட்டு ராடால் தன்னை தாக்கியதால் ரத்தக் காயம் ஏற்பட்டுவிட்டது, புகழுக்கு எனது வளர்ச்சி பார்த்து பொறாமை. இதனால் செட்டில் என்னை மோசமாக நடத்துகிறார்கள்.
நான் குக் வித் கோமாளி படப்பிடிப்பு செட் பக்கத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் ஆகியோர் மீது புகார் அளித்திருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.






