வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி… சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ

சின்ன மருமகள்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் சின்ன மருமகள்.
நன்றாக படித்து மருத்துவராகி எல்லோருக்கும் இலவச மருத்துவம் செய்ய வேண்டும் என்ற கனவோடும், ஆசையோடும் இருந்த ஒரு பெண் தனது குடும்பத்தின் ஏழ்மையால் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து அனுபவிக்கும் கஷ்டங்கள், பிரச்சனைகளை பற்றி காட்டும் விதமாக அமைந்துள்ளது சின்ன மருமகள்.
இப்போது கதையில் தமிழ்ச்செல்வி, ராஜாங்கத்திற்கு எதிராக ஒரு திருமணம் செய்துவைத்துவிட்டார் என்ற பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
புரொமோ
இந்த வாரத்திற்கான புதிய புரொமோவில், தனது மனைவி செய்த காரியத்தால் தான் அப்பா கஷ்டப்படுகிறார், போலீசிடம் அடி வாங்குகிறார் என்று எண்ணிய சேது வீட்டிற்கு வந்து தனது மனைவியை கோபமாக திட்டி வீட்டைவிட்டு வெளியே போகச்சொல்கிறார்.
அவர் சொன்னதை கேட்டு ஷாக் ஆன தமிழ்ச்செல்வி, அட நிறுத்துயா, ஒரு கணவன்-மனைவி இடையே முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும்.
6 மாதத்திற்கு ஒருமுறை நான் தவறு செய்யாதவள் என நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என கூறி தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி இந்த குடும்பத்தை இன்றோடு தலைமுழுகுகிறேன் என்று வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
தமிழ்ச்செல்வி செய்த இந்த காரியத்தை கண்டு குடும்பமே செம ஷாக் ஆகிறார்கள். இதோ புரொமோ,






