அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்… படப்பிடிப்பு தள போட்டோ

அய்யனார் துணை
கடந்த வருடம் சில புதுமுகங்களுடன் 4 அண்ணன்-தம்பிகளின் கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் அய்யனார் துணை.
ஆனால் தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் உங்களது பேவரெட் தொடர் என்னவென்றால் முதலில் அய்யனார் துணை தான் கூறுவார்கள், அந்த அளவிற்கு சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இப்போது கதையில் திருட்டு பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ள சோழன், ஒரு சவாரிக்காக நிலாவுடன் சேர்ந்து கோவில்பட்டி சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் சின்ன சின்ன அழகான விஷயங்கள் எல்லாம் நடக்கின்றன.
இன்றைய எபிசோடில், சேரனுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அதாவது சந்தாவின் உறவினர்கள் இங்கே வந்து அவரை அழைத்துச்செல்ல முடிவு செய்துள்ளதாக அவர் அண்ணன் கூற சந்தா அழுது புலம்புகிறார், சேரன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.
படப்பிடிப்பு போட்டோ
சோழன் ஒருபக்கம் நிலாவுடன் நேரம் செலவிட வழி கிடைத்ததால் சந்தோஷமாக இருக்கிறார். இருவரும் நிறைய பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் வீட்டில் சேரன், சந்தாவிற்கு கஷ்டமான நிலை ஏற்பட்டதால் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தான் அய்யனார் துணை சீரியலின் படப்பிடிப்பு தள போட்டோ வெளியாகியுள்ளது.
அதில் சேரன் வேஷ்டி சட்டை அணிந்துகொண்டிருக்க மற்றவர்களும் திருமணத்திற்கு செல்வது போல் தயாராகியுள்ளனர். கோவிலில் இந்த போட்டோ பார்க்கும் போது சேரன்-சந்தா திருமணம் போல் தெரிகிறது.






