சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் செந்தில்-ராஜலட்சுமி மகன், மகளா இது, நன்றாக வளர்ந்துவிட்டார்களே… லேட்டஸ்ட் போட்டோ

சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
சீனியர்-ஜுனியர் என மாறி மாறி ஒவ்வொரு வருடமும் ஹிட் சீசன்கள் ஒளிபரப்பாகிறது, ஒவ்வொரு சீசனிற்கும் வித்தியாசமான கான்செப்ட் இருக்கும். கடைசியாக சீனியர்களுக்கான சீசன் நடந்தத, இதில் முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் நடுவராக வர நிகழ்ச்சி கலைகட்டியது.
செந்தில்-ராஜலட்சுமி
மக்களிடம் அறிமுகம் இல்லாத திறமையானவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமானார்கள்.
அப்படி நாட்டுப்புற கலைஞர்கள் பாடல்கள் பாடி தங்களது வட்டாரத்திற்குள் பிரபலமாகி வந்த செந்தில்-ராஜலட்சுமி இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட களமிறங்கினர்.
அந்த மேடையை பொறுப்பாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் இப்போது கலந்துகொள்ளாத நிகழ்ச்சியே இல்லை என கூறலாம். தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளிலும் நிறைய மேடைகள் எறி நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் செந்தில்-ராஜலட்சுமியின் மகன்-மகளின் புகைப்படம் வெளியாக அட இவர்களின் பசங்களா இவர்கள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.






