ஜனனிக்கு எதிராக விசாலாட்சியை லாக் செய்த குணசேகரன், இப்படியொரு ஆபத்தா?… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற படு ஹிட்டான சீரியலை கொடுத்த திருச்செல்வம் இயக்கத்தில் இப்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இப்போதெல்லாம் சீரியலின் கதைக்களத்தை பார்க்கும் போது கோலங்கள் என்ற சூப்பர் ஹிட் சீரியலை இயக்கியவரா இந்த தொடரை இயக்குகிறார் என்று இருக்கிறது. கடத்தல், கொலை, ஓட்டம், ரவுடிசம், ஆணாதிக்கம் இப்படியே கதை சென்று கொண்டிருக்கிறது.
பெண் எழுச்சிக்கான கதை என ஆரம்பத்தில் கூறினார்கள் ஆனால் கதை ஒரு துளி கூட சீரியல் குழு சொன்னது போல் இல்லை.
புரொமோ
தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் ஸ்பெஷல் புரொமோ வந்துள்ளது. அதில் சக்தி-ஜனனி கொடைக்கானலில் ஜாலியாக தங்களது நாட்களை கழித்து வருகிறார்கள்.
வீட்டில் அறிவுக்கரசி குணசேகரனிடம் சென்று, நாளைக்கு அவர்கள் இல்லாமல் ஒரு பூஜை நடக்க வேண்டும், அப்படி நடந்தால் வாரிசு முதற்கொண்டு எல்லாம் காலி அதானே உங்கள் பிளான் என்கிறார்.
பின் ஜனனி-சக்தி இல்லாமல் பூஜை எப்படி என விசாலாட்சி குழம்பி கொண்டிருக்க ஞானம்-கதிர் நாளை இந்த பூஜை நடந்தே ஆக வேண்டும், தடங்கல் சொல்லாதே என்கிறார்கள்.
இந்த பூஜை விஷயத்தில் குணசேகரன் தம்பிகளை வைத்து தனது அம்மாவை நன்றாக லாக் செய்துவிட்டார், அவர் என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்.






