நல்ல மாப்ள இருந்தா சொல்லுங்க.. ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னதும் நடந்த விஷயத்தால் ஷாக்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 36 வயதாகிறது.
எப்போது திருமணம் என அவரிடம் பல பேட்டிகளில் கேள்வி கேட்டு வருகிறார்கள். தற்போது ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது அதே கேள்வியை செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
மாப்ள இருந்தா சொல்லுங்க
கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் “நல்ல மாப்ள இருந்த காட்டுங்க” என கூறினார். உடனே அங்கே கரண்ட் கட் ஆகி இடமே இருட்டாகிவிட்டது.
“போச்சுடா.. கரண்ட் போச்சு. நல்ல பசங்களே இல்லையா” என தலை மீது கை வைத்து விட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.






