ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ – கமல்ஹாசன் நேரில் சந்திப்பு!

கமல்ஹாசன் – ரஜினி
நடிகர் ரஜினியின் அடுத்து படமான “தலைவர் 173” படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தை சுந்தர் சி இயக்க போவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பின் சில தினங்களில் சுந்தர் சி படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவிப்பு வெளியானது.
நேரில் சந்திப்பு!
இந்நிலையில், கமல்ஹாசனும், குஷ்பூவும் சென்னை விமான நிலையத்தில் நேரில் சந்தித்துக்கொண்டார்கள்.
அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள். அந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






