வங்கக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்.., தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை

வங்கக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்.., தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை


வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை மையம் கூறுகையில்..,


நேற்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலவுகிறது.



இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிக்கு அருகில் நிலவக்கூடும்.

வங்கக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்.., தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை | Heavy Rain Likely In Tamil Nadu For Next 6 Days

அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.



இதன் காரணமாக, இன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



மேலும், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்.., தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை | Heavy Rain Likely In Tamil Nadu For Next 6 Days



டிச19ஆம் திகதி நாளை வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


மேலும், டிச20 முதல் டிச24ஆம் திகதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *