பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்கவிருந்த வாரிசு நடிகர்.. ஆனால் நிராகரித்தது ஏன்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018ல் ரிலீஸ் ஆன படம் பரியேறும் பெருமாள். அதில் கதிர், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். அந்த படத்திற்க்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் நல்ல வரவேற்பை பெற்றதால், அவர் அதே பாணியில் ஜாதி பிரச்சனைகளை காட்டும் வகையில் தொடர்ந்து படங்கள் இயக்கி வருகிறார்.
அதர்வா
பரியேறும் பெருமாள் கதையை முதலில் மாரி செல்வராஜ் நடிகர் அதர்வாவிடம் தான் கூறினாராம். ஆனால் சூழ்நிலை காரணமாக அவர் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அந்த தகவலை தற்போது மாரி செல்வராஜ் கூறி இருக்கிறார். அதர்வா தனது கதையை நிராகரித்தது தனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது என்றும் அவர் கூறி இருக்கிறார்.