மகாநதி சீரியல் நடிகை வைஷாலிக்கு நடந்த 5வது மாத வளைகாப்பு.. நிகழ்ச்சியின் வீடியோ இதோ

மகாநதி சீரியல்
விஜய் டிவியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் மகாநதி.
இப்போது இந்த தொடரின் கதையில் விஜய்-காவேரி பிரிந்துள்ளார்கள். வெண்ணிலாவை விஜய் எப்படி புரிய வைத்து காவேரியுடன் இணைவார் என்பதே மீதிக்கதையாக உள்ளது.
ஒவ்வொரு நாளின் எபிசோடும் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
வெண்ணிலா-விஜய் திருமண கதைக்களம் தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
வளைகாப்பு
மகாநதி சீரியலில் வெண்ணிலாவாக நடிக்கும் வைஷாலி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் அவருக்கு 5வது மாத வளைகாப்பு கோலாகலமாக நடந்துள்ளது.
நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.






