யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் தனது திருமணம் பற்றிய உண்மையை கூறிய ராஜி, ஷாக்கில் குடும்பத்தினர்… பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் பாகம் அண்ணன்-தம்பிகள் பாசப் போராட்டத்தை கூறும் தொடராக அமைய முதல் சீசன் முடிந்த வேகத்தில் 2ம் சீசன் தொடங்கியது.
இது அப்பா-மகன்கள் குறித்த கதையாக தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வார புரொமோவில் தனது நகையை விற்று கதிருக்கு உதவ முடிவு செய்து நகைகளை விற்க முயற்சிக்கிறார் ராஜி. அப்போது அதனை அவரது சித்தப்பா பார்த்துவிட்டு பெரிய பிரச்சனை செய்கிறார்.
புரொமோ
இந்த நகை பிரச்சனை வைத்து பாண்டியனை அசிங்கப்படுத்த ராஜி அப்பா நிறைக்க அந்த நேரத்தில் உண்மையை கூற முன்வருகிறார்.
ராஜி தான் காதலித்தது ஒருவனை, ஆனால் அவன் என்னை ஏமாற்றிவிட்டு நகையோடு ஓடிப்போனான். அப்போது தற்கொலை செய்ய நினைத்த போது கதிர் அங்கு வர திருமணம் செய்துகொள்ள கேட்டேன் என கூறுகிறார்.
இதைக்கேட்டு அனைவருமே ஷாக் ஆகிறார்கள்.