கண் விழித்த ஈஸ்வரி, அடுத்து குடும்பத்திற்கே வந்த ஷாக்கிங் நியூஸ்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தயாராகி இருக்கிறது என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் பார்க்க தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல்.
முதல் பாகத்தில் பெண்கள் எழுச்சிக்கான கதைக்களம் அமையும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து கடைசியில் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் பெண்கள் ஜெயித்தது போல் காட்டப்பட்டது, ஆனால் முதல் பாக முடிவை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
தற்போது முதல் பாக முடிந்த வேகத்தில் 2ம் பாகம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
புரொமோ
கதையில் இப்போது குணசேகரனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இத்தனை மாதங்கள் சிகிச்சை பெற்றுவந்த ஈஸ்வரி இப்போது குணமாகிவிட்டார். இன்றைய எபிசோட் புரொமோவில், அவரைக் கண்ட குடும்பத்தினர் மிகவும் சந்தோஷப்படுகிறார்கள்.
ஆனால் அவர் கொடுத்த ஷாக் அனைவரும் என்ன இது என நிற்கிறார்கள். அதாவது ஈஸ்வரிக்கு சில விஷயங்கள் எல்லாம் மறந்துவிட்டதாம், சக்தி வேலைக்கு சென்றது குறித்து பேசுகிறார், ஆனால் ஜனனியை பற்றி அவருக்கு தெரியவில்லை.
ஈஸ்வரி நான் எனது கணவரிடம் பேச வேண்டும் என கூற விசாலாட்சி கூட ஷாக் ஆகிறார்.






