மடோன் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டிய லோகேஷ் கனகராஜ்

மடோன் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டிய லோகேஷ் கனகராஜ்


சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.’கூலி’ படத்தில் இடம் பெற்றுள்ள சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவரமாக நடைபெற்று வருகின்றன.

‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர் மடோன் அஸ்வின். தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான கதையினை இறுதி செய்து வருகிறார். ‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விக்ரம் 63’ என பெயரிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ், மடோன் அஸ்வின், ரத்னகுமார், சந்துரு உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்கள்.

தற்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் மடோன் அஸ்வின் பணிபுரியும் விதத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “நாங்கள் எல்லாம் குறும்படம் என்றால் என்ன என்று கற்றுக் கொண்டிருக்கும் போது, மடோன் அஸ்வின் குறும்படத்துக்கு தேசிய விருது வாங்கினான். தேசிய விருது எப்படியிருக்கும் என்பதை அவனுடைய அறையில் தான் பார்த்தேன். முதல் படம் இயக்கினால் தேசிய விருது படமாகதான் இருக்க வேண்டுமென விரும்பினான். 10 ஆண்டுகள் கழித்து ‘மண்டேலா’ இயக்கினான். 2014-ம் ஆண்டு நான் முதல் படம் கையெழுத்திட்ட போது அவன் கதை எழுதிக் கொண்டிருந்தான். நான் 4-வது படம் இயக்கும் போதுதான் அவன் முதல் படம் வெளியானது. அஸ்வினாக என்றைக்காவது வெளியே வந்து படம் இயக்கினால் தான் உண்டு. நானெல்லாம் கடைசி பென்ச் மாணவன், ஏதாவது செய்து தப்பித்துவிடுவேன். ‘மாவீரன்’ படத்தையே இவ்வளவு கமர்ஷியலா ஒரு படம் இயக்கிவிட்டோமா என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஆகையால் தான் அடுத்த படத்தை ரொம்ப நாட்கள் எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறான்” என்று தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *