“என்னைத் தொட முயன்றார்… நான் அறைந்தேன்”

“என்னைத் தொட முயன்றார்… நான் அறைந்தேன்”


சென்னை,

திரைப்படத் துறையில் தற்போது பிரபல நடிகைகளாக வலம் வரும் பலர், தொடக்கத்தில் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். சிலர் வாய்ப்புகளை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் அமைதியாக இருந்தாலும், சிலர் இந்தப் பிரச்சினைகள் குறித்து தைரியமாகப் பேசுகிறார்கள்.

சமீப காலமாக திரைப்படத் துறையில் காஸ்டிங் கவுச் இருப்பது குறித்து பல நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே, தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான்-இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி தனது கேரவனில் நுழைந்ததாக அவர் கூறினார். எல்லை மீறி தன்னைத் தொட முயன்றதாகவும் உடனடியாக அவரை அறைந்ததாகவும் பூஜா ஹெக்டே தெரிவித்தார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் மீண்டும் தன்னுடன் பணிபுரியவில்லை எனவும் தெரிவித்தார். பூஜாவின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *