37 வயதில் பிரபல சின்னத்திரை நடிகை காலமானார்… ஷாக்கில் ரசிகர்கள்
சீரியல் நடிகை
மக்கள் இப்போதெல்லாம் நாயகன், நாயகிகளை தாண்டி மற்ற எல்லா கலைஞர்களையும் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.
சிறப்பான நடிப்பை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு மக்களிடம் நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது.
இப்போது ஒரு பிரபல சின்னத்திரை நடிகையின் இறப்பு செய்தி ரசிகர்களை மிகவும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.
என்ன ஆனது
கன்னடச் சின்னத்திரை மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஷ்மி லீலா. 37 வயதான அவர் கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் நோயின் காரணமாக சிகிச்சைப்பெற்று வந்தார்.
பெங்களூருவைச் சேர்ந்த இவர், 2019-ஆம் ஆண்டு முதல் ‘பல்மோனரி ஃபைப்ரோஸிஸ்’ எனப்படும் தீவிர நுரையீரல் தழும்பேறுதல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் உடல்நிலை ஒத்துழைக்காததால் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.






