விஜய்யே என்னை அழைத்து பாட சொன்னாலும் நான் அவருக்கு பாட மாட்டேன்… பிக்பாஸ் கானா வினோத்

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்க கடுமையாக போராட்டத்தை தாண்டி வெற்றிப் பெற்றவர் தான் நடிகர் விஜய். அப்பாவின் உதவியுடன் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் அவரது கடின உழைப்பு பெரிய பங்கு வகித்துள்ளது.
கோடான கோடி மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியலில் களமிறங்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே அரசியல் வேலைகளில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் மும்பையில் அட்லீ-ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வந்தது.
கானா வினோத்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் கானா வினோத். 9வது சீசனின் டைட்டிலை வென்றிருக்க வேண்டும் ஆனால் இடையில் ரூ. 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, விஜய் சாரே அழைத்து அவர் கட்சிக்கு ஒரு அரசியல் பாட்டு பாட சொன்னால் நான் பாட மாட்டேன்.
நான் பொதுவான ஒரு ஆள், அவர் கட்சிக்காக நான் பாடினால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும். இதுவே நான் அவர் படத்தில் பாட சொன்னால் பாடுவேன், கட்சிக்காக பாட மாட்டேன் என்று கூறியுள்ளார்.






