துரந்தர் 2 திரைப்படம் எப்படி இருக்கு? வெளிவந்த முதல் விமர்சனம்..

துரந்தர்
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் துரந்தர். இப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இப்படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய் கண்ணாவிற்கு பலரும் ரசிகர் ஆனார்கள். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் விமர்சனம்
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துரந்தர் 2 தி ரிவெஞ் திரைப்படம் நாளை பிரம்மாண்டமான முறையில் உலகளவில் வெளியாகிறது.
இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படத்தை சமீபத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு தனது முதல் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் துரந்தர் 2 படம் சிறப்பாக வந்துள்ளது, புதிய சினிமாட்டிக் இலக்கணம் பிறந்துள்ளது என படத்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இயக்குநர் ராம் கோபால் வர்மா இப்படத்தை பாராட்டி புகழ்ந்து தெரிவித்துள்ள விமர்சனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், அவர் இப்படம் குறித்து தெரிவித்த விமர்சனத்தை இதோ பாருங்க:
After last nights watch of #Dhurandhar2 in terms of it’s sheer cumulative impact in every which way , whether on it’s expected collections , audience euphoria , social influences , cinematic grammar breaking , and above all the psychological audio visual impact , it will be a…
— Ram Gopal Varma (@RGVzoomin) March 18, 2026






