தமிழ் நன்றாக பேசுவது எப்படி?.. காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி ஓபன் டாக்!

ரிஷப் ஷெட்டி
2022ல் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் காந்தாரா. அந்த படத்தை இயக்கி நடித்து இருந்தவர் ரிஷப் ஷெட்டி. இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஓபன் டாக்!
இந்நிலையில், ரிஷப்பிடம் தமிழ் மிகவும் நன்றாக பேசுகிறீர்களே எப்படி? என கேள்வி எழுந்தது அதற்கு அவர் அளித்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” சிறு வயது முதல் நான் அதிகம் தமிழ் சினிமா பார்ப்பேன். என்னுடைய முதல் படம் ‘குப்பி’. தமிழில் தான் வந்தது. அதற்காக ஒரு மாதம் தமிழ் கற்றுக் கொண்டேன்.
தொடர்ந்து நண்பர்களுடன் பேசி பேசி தமிழ் கற்றுக் கொண்டேன். தமிழ் மொழியை கற்க மிகவும் ஆர்வமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.