காந்தாரா Chapter 1 கிளைமேக்ஸ் படப்படிப்பில் ரிஷப் ஷெட்டிக்கு ஏற்பட்ட கஷ்டம்… போட்டோவுடன் வெளியிட்ட பிரபலம்

காந்தாரா Chapter 1
ஆயுத பூஜை, விஜயதசமி ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகின, அதில் ஒரு படம் தான் கன்னட சினிமாவில் தயாரான காந்தாரா Chapter 1.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடிக்க கடந்த அக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளியாகி இருந்தது. ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இதுவரை படம் ரூ. 670 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை கொண்டாடி வர ரிஷப் ஷெட்டி போட்ட ஒரு பதிவு ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.
கிளைமேக்ஸ்
காந்தாரா Chapter 1 படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக ரிஷப் ஷெட்டி அதிகம் கஷ்டப்பட்டுள்ளாராம். உடல் ரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்பதை புகைப்படத்துடன் அவர் பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், உடல் ரீதியாக கடினமான இந்த படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பின் போது எனது கால்கள் வீங்கி விட்டது. எனது உடம்பில் சோர்வு, கால்களில் காயங்கள் இருந்தபோதிலும் இந்த காட்சியை கஷ்டப்பட்டு படமாக்கினேன்.
நான் நம்பும் தெய்வீக சக்தி தான் எனக்கு அப்போது சிறந்த ஆற்றலை கொடுத்தது என பதிவு செய்துள்ளார்.
Climax shooting ನ ಸಮಯ … ಊದಿಕೊಂಡಿದ್ದ ಕಾಲು , ನಿತ್ರಾಣವಾಗಿದ್ದ ದೇಹ.. ಇವತ್ತು ಕೋಟ್ಯಂತರ ಜನ ನೋಡಿ ಮೆಚ್ಚುವಹಾಗೆ ಆಗಿದೆ.. ಇದು ನಾವು ನಂಬಿರುವ ಶಕ್ತಿಗಳ ಆಶೀರ್ವಾದದಿಂದ ಮಾತ್ರ ಸಾಧ್ಯ ..
ಸಿನಿಮಾ ನೋಡಿ ಅಭಿಪ್ರಾಯ ವ್ಯಕ್ತ್ಯಪಡಿಸಿದ ತಮ್ಮೆಲ್ಲರಿಗೂ ಧನ್ಯವಾದಗಳು..
This was during the climax shoot , a swollen leg, an… pic.twitter.com/JJadywiaXN
— Rishab Shetty (@shetty_rishab) October 13, 2025