ஏழுமலையான் கோவிலில் இசையமைப்பாளர் அனிருத்.. சொன்ன அந்த விஷயம்!

அனிருத்
தமிழ் சினிமா கொண்டாடும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். ஏ.ஆர்.ரகுமான் பள்ளியில் பயின்று இன்று இந்தியாவை தாண்டி கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளார்.
அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் யூடியூப் தளத்தில் வெளியான விரைவிலேயே மில்லியன் பார்வையாளர்களை பெற்று விடுகிறது.
இவரது இசையமைப்பில் தமிழில் ஜனநாயகன், லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற படங்களும், தெலுங்கில் சில படங்களும் அடுத்து வெளியாக இருக்கிறது.
அந்த விஷயம்!
இந்நிலையில், இசையமைப்பாளரான அனிருத் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், கூலி,மதராஸி படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.