அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்… வெளிவந்த விவரம்

மகாபாரதம்
புராண கதைகள், இதிகாச கதைகள் கேட்பதற்கு ஒரு இனிமை, அதிலும் அதை பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு தனி பிரியம் தான்.
மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களை எத்தனை முறை பார்த்தாலும் படித்தாலும் அலுக்கவே அலுக்காது, புதியது போலவே இருக்கும்.
இந்த கதையில் பாண்டவர்கள், கௌரவர்கள், திரௌபதி, சகுனி மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். மகாபாரத கதையை வைத்து நிறைய தொடர்கள் வந்துள்ளது, 25 வருடங்களுக்கு முன்னரே மகாபாரத கதையெல்லாம் எடுக்கப்பட்டு விட்டது.
ரீ-டெலிகாஸ்ட்
அப்படி கடைசியாக பிரம்மாண்ட பொருட்செலவில் ஹிந்தியில் எடுக்கப்பட்ட மகாபாரதம் கதை பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் கதை இப்போது மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
வரும் திங்கள் முதல் காலை 7 மணிக்கு தொடங்கி 8 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.






