வழக்கில் இருந்து தப்பிக்க குணசேகரனின் அடுத்த மூவ், நந்தினியை விளாசிய விசாலாட்சி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
அட என்னப்பா ஒரு முடிவுக்கு வாங்கப்பா என புலம்பும் அளவிற்கு எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் அமைந்து வருகிறது.
வில்லன்கள் சந்தோஷப்படும் வகையில் நிறைய விஷயங்களும், அவமானப்படும் வகையில் நாயகிக்கான கதைக்களமும் முதல் பாகத்தில் இருந்தே அப்படியே தொடர்ந்து வருகிறது.
இப்போது ஒரு மாற்றமும் இல்லை, வில்லன் இன்னொருவர் சேர்ந்துள்ளார் அவ்வளவு தான்.
இப்படியே கதையை எத்தனை வருடங்கள் இயக்குனர் கொண்டு செல்வார் என்பது தெரியவில்லை. ரசிகர்களும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோவிற்கு கீழ் நிறைய புலம்புகிறார்கள், ஆனால் இயக்குனர் கேட்பது போல் தெரியவில்லை.
புரொமோ
இப்போது வந்துள்ள சீரியலின் புதிய புரொமோவில், குணசேகரன் வழக்கில் இருந்து தப்பிக்க ராவணன் என்னென்னமோ செய்கிறார். அவரது வழக்கை நடத்த புதிய வக்கீலை ஏற்பாடு செய்கிறார் ராவணன்.
இன்னொரு பக்கம் நந்தினி, ஜனனிக்கு ஜுஸ் கொண்டுவந்து கொடுக்க விசாலாட்சி, அவள் கொடுத்ததை குடிக்காதே, பின் அவள் புருஷன் சொன்னது போல் ஆனால் என்ன செய்வது என கூறுகிறார்.
கடைசியாக சக்தி வேறு வீடு பார்க்க அலைய அங்கு அவர்கள் வாடனை அதிகம் கேட்பது குறித்து கூறுகிறார்.






