திருமண நாளில் கணவருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட நடிகை பாவனா… குவியும் லைக்ஸ்

நடிகை பாவனா
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் போன்று பல படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை பாவனா.
மலையாளத்திலும் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார், ஆனால் இடையில் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மனக் கஷ்டத்தால் சினிமா பக்கமே வரவில்லை.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்ஸ்டாவில் போட்டோ ஷுட்கள் மூலம் ஆக்டீவாக இருந்து வந்தவர் படங்களில் நடிக்கவும் தயாராகிவிட்டார்.
திருமணம்
நடிகை பாவனாவிற்கு கடந்த 2018ம் ஆண்டு நவீன் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடந்தது.
இடையில் கேப் எடுத்தவர் என்டிக்காக்கக்கொரு பிரேமண்டார்ன் என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
தற்போது இன்று பாவனா தனது இன்ஸ்டாவில் திருமண நாள் ஸ்பெஷலாக கணவருடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.






