புதிய உச்சத்தை எட்டிய சன் டிவியின் கயல் சீரியல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

புதிய உச்சத்தை எட்டிய சன் டிவியின் கயல் சீரியல்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்


கயல் சீரியல்

சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக செல்லும் கதைகளில் ஒன்று தான் கயல்.

ஆனந்தி திருமண பிரச்சனையால் கயலை விட்டு பிரிந்த எழிலை பழைய பகையாக இருந்துவந்த பாலுவின் நண்பர்கள் அவரை மோசமாக அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

எழில் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த அவரது அம்மா இதுதான் நேரம் கயலிடம் இருந்து எழிலை பிரிக்க வேண்டும் என கிரிமினல் வேலைகள் செய்துள்ளார்.

புதிய உச்சத்தை எட்டிய சன் டிவியின் கயல் சீரியல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Kayal Serial Reached New Milestone

கயலும் எழிலை காணாமல் மனம் உடைந்து போய்விட்டார், எங்கெங்கோ எழிலை தேடி அலைகிறார் ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எழில் இருக்கும் சில விஷயங்களின் ஆதாரம் கயலுக்கு கிடைத்துள்ளது, கண்டிப்பாக எழிலை மீட்பேன் என போராடி வருகிறார்.

குட் நியூஸ்


இந்த நேரத்தில் கயல் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

அதாவது புதிய ஜோடி இணைய கடந்த 2021ம் ஆண்டு கயல் சீரியல் துவங்கப்பட்டது, அன்று முதல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது, டிஆர்பியில் டாப்பில் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் கயல் சீரியல் ஒளிபரப்பாகி 1500 எபிசோடுகளை எட்டிவிட்டதாம், புதிய சாதனையை கயல் சீரியல் படைக்க ரசிகர்கள் சீரியல் குழுவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *