தங்கமயில் பிரசவத்திற்கு பணம் கொடுத்த கோமதி.. ஆனால், மயில் எடுத்த ஷாக்கிங் முடிவு! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

இதுவரை நடந்தது
பாண்டியன் ஸ்டோர்ஸ் – அழகே அழகு சீரியலின் மகா சங்கமம் சமீபத்தில் நிறைவுபெற்றது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முத்துவேல் ஆபரேஷன் முடிந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் என்கிறதை மறைத்து, குடலிறக்கம் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது என கூறியுள்ளனர். ஆனால், அவருக்கு புற்றுநோய் இருக்கும் விஷயத்தை பாண்டியனிடம் சுரேஷ் கூறிவிட்டார்.
இதற்கிடையில், எதற்காக கதிருடன் முத்துவேல் சென்றார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என மிகப்பெரிய பிரச்சனை செய்துவிட்டார் சக்திவேல். என்னதான் தனக்கு குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள் என முத்துவேல் கூறினாலும், சக்திவேலுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.
அடுத்த வாரம்
இந்த விஷயம் ஒரு பக்கம் சென்றுகொண்டிருக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதில், கர்ப்பமாக இருக்கும் தங்கமயில் பிரசவத்தின் செலவிற்காக வீடு தேடி வந்து பணம் கொடுக்கிறார் கோமதி. ஆனால், அந்த பணத்தை ஏற்க மறுக்கிறார் தங்கமயில். இதனால் கோமதியின் வீட்டிற்கு சென்று இந்த பணம் எனக்கும் என் பிள்ளைக்கும் வேண்டாம் என கூறிவிட்டு பணத்தை திருப்பி தந்துவிடுகிறார்.






