எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு தொடர்ந்து பரப்பரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது.
ஆர்த்தி தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என கேட்ட நிலையில், நீதிமன்றம் மாதம் 3 லட்சம் ரூபாய் ரவி மோகன் தர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.
இது பற்றி ஆர்த்தியின் தயார் தற்போது பேட்டி அளித்து இருக்கிறார்.
40 லட்சம் கேட்டது இதற்கு தான்
ஆர்த்தி மாதம் 40 லட்சம் கேட்டார் என சொல்வது பொய். தற்போது நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு சாதகமாக தான் வந்திருக்கிறது.
ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சம், இரண்டு மகன்களுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் மாதம்தோறும் என மொத்தமாக 5 லட்சம் அவர் தர வேண்டும்.
மேலும் அமெரிக்கன் ஸ்கூலில் படிக்கும் இரண்டு மகன்களுக்கும் ஸ்கூல் பீஸ் மட்டும் வருடம் 86 லட்சம் ரூபாய் வருகிறது. அதை ரவி மோகன் கட்ட வேண்டும். மேலும் மகன்கள் கராத்தே க்ளாஸ், செஸ் க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ் என extracurricularக்கும் அவர் பணம் தர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
இதை எல்லாம் சேர்த்து தான் 40 லட்சம் வருகிறது. அதை தான் கேட்டோம் என ஆர்த்தியின் தாயார் கூறியுள்ளார்.






