மனோஜ்-விஜயா சேர்ந்து ரோஹினிக்கு வைத்த ஆப்பு… சிறகடிக்க ஆசை புரொமோ

மனோஜ்-விஜயா சேர்ந்து ரோஹினிக்கு வைத்த ஆப்பு… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பெரிய அளவு சொல்லும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை.

மனோஜ், ரோஹினிக்கு பேய் பிடித்துவிட்டது என கூறி கலாட்டா நடக்கிறது. அதன்பின் ஸ்ருதி-ரவி இருவரும் தங்களது முதல் திருமண நாளை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என பேசுகிறார்கள்.

கடைசியில் முத்து, ஒரு இக்கட்டான சூழ்நிலையால் நோ என்ட்ரியில் காரை ஓட்டிச் செல்ல அதனால் டிராபிக் போலீசிடம் சிக்க அவரது காரை எடுத்துக் செல்கின்றனர்.

மனோஜ்-விஜயா சேர்ந்து ரோஹினிக்கு வைத்த ஆப்பு... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial January 30 Promo

கார் போலீஸ் எடுத்த கோபத்தில் முத்து வீட்டிற்கு வர மீனாவிடம் சண்டை போடுகிறார். மீனா கணவர் காரை திரும்ப வாங்க அவருக்கு தெரிந்த வழியில் ஒருவரை சந்திக்கிறார்.

புரொமோ


இன்றைய எபிசோட் முடிவில் நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகிறது. அதில், தூங்கிக் கொண்டிருக்கும் ரோஹினியின் காலில் மனோஜ்-விஜயா சேர்ந்து அடிக்கிறார்கள்.

இதனால் வலி தாங்காமல் ரோஹினி கத்த விஜயா அப்படி அடித்தால் தான் பேய் போகும் என கூற, இப்படி அடித்தால் என் உயிர் போய்விடும் என ரோஹினி கூறுகிறார்.

உடனே மனோஜ் கொம்பை கீழே போட்டுவிட்டு ரோஹினி அருகில் வந்து என்ன இப்படி சொல்கிறாய் என கேட்கிறார், அப்போது விஜயா முகம் மாறிவிடுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *